Thursday, May 30, 2013

10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.

10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.


10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாணவ–மாணவிகளின் பள்ளிக்கல்வி வாழ்க்கையில் எஸ்.எஸ்.எல்.சி. என்று அழைக்கப்படும் 10–ம் வகுப்பு தேர்வும், பிளஸ்–2 பொதுத்தேர்வும் முக்கிய இடம் வகிக்கின்றன. 10–ம் வகுப்பு முடித்த கையோடு பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும்.
அதேபோல், பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ்–2 மதிப்பெண் மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு மாணவர் கலை அறிவியல் படிப்பில் சேருவதையும், மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதையும் நிர்ணயிப்பது அவரது பிளஸ்–2 மதிப்பெண்தான். எனவே, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வுகளுக்கு மாணவ–மாணவிகளும் அதிலும் குறிப்பாக, அவர்களின் பெற்றோர்களும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இந்த ஆண்டு பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1–ந் தேதி தொடங்கி, 27–ந் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 27–ந் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 12–ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 3,012 மையங்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினார்கள்.
மாணவ–மாணவிகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 13–ந் தேதி தொடங்கி, 26–ந் தேதி முடிந்தது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 9–ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 31–ந் தேதியும் வெளியிடப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பிளஸ்–2 தேர்வு முடிவு கடந்த 9–ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 12–ம் வகுப்பு தேர்வு முடிவு 27–ந் தேதி வெளியானது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 10–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை (31–ந் தேதி) காலை 9.15 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிடுகிறார்.
தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில நொடிகளில் ஆன்லைனில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.




பிளஸ்–2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ–மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்து இருந்தது. எனவே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் அதேபோல் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 600–க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2,012 பி.எட். இடங்களும், தனியார் கல்லூரிகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுகளும் உள்ளன.

அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரையில், 100 சதவீத இடங்களும், உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும், உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படுகின்றன. தனியார் கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினரே அனைத்து இடங்களையும் நிரப்புகிறார்கள்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பி.எட். மற்றும் எம்.எட். தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கின. பி.எட். தேர்வு ஜூன் மாதம் 11–ந் தேதியும், எம்.எட். தேர்வு ஜூன் 3–ந் தேதியும் முடிவடைகிறது. பொதுவாக பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

வரும் கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் எப்போது வழங்கப்படும்? என்று தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வியிடம் கேட்டபோது, ‘‘2013–2014–ம் கல்வி ஆண்டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை வழிமுறைகள் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஆகஸ்டு மாதம் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு இரண்டு விதமான கட்டணத்தை அரசு நிர்ணயித்து இருக்கிறது. தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளாக இருந்தால் ரூ.46,500–ம், நாக் அங்கீகாரம் பெறாத கல்லூரிகளாக இருப்பின் ரூ.41,500–ம் கட்டணம் வசூலிக்கலாம்.

சுயநிதி கல்லூரிகளில் அனைத்து பி.எட். இடங்களையும் நிர்வாகத்தினரே நிரப்பலாம் என்றாலும் ஒருசில கல்லூரி நிர்வாகங்கள் கவுன்சிலிங் மூலம் இடங்களை நிரப்பும் வகையில் அரசிடம் குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒப்படைக்க தயாராக உள்ளன.

கவுன்சிலிங் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்றால் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகள் வருவார்கள் என்பது அவர்களின் எண்ணம். ஆனால், கவுன்சிலிங்கிற்கு தாமாகவே முன்வந்து இடங்களை கொடுக்க தனியார் கல்லூரிகள் முன்வந்தால்கூட அரசு அதற்கு தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுபோன்று தாமாகவே முன்வந்து கவுன்சிலிங்கிற்கு இடங்களை ஒப்படைக்க விரும்பும் தனியார் கல்லூரிகளிடம் கல்லூரி கல்வித்துறை இடங்களை பெற்று கவுன்சிலிங் மூலம் நிரப்ப முன்வர வேண்டும் என்று ஒருசில கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்பார்க்கிறார்கள்.

Wednesday, May 29, 2013

www.tn.govt.nic.in

பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் நலத்திட்டங்கள்

விலையில்லா மடிக்கணினி

 விலையில்லா மிதிவண்டி

 விலையில்லா பாட

யுனெஸ்கோ போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை

யுனெஸ்கோ போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை

 யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தமிழக கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பாரீசை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பு மற்றும் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் இணைந்து "பிளை யுவர் ஐடியாஸ்" என்ற பெயரில் எதிர்கால விமானங்கள் குறித்த போட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. உலகம் முழுவதிலும் இருந்து 82 நாடுகளைச் சேர்ந்த 618 குழுக்களில் மொத்தம் 6 ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
இதன் இறுதிப்போட்டிக்கு சென்னையைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம்., பல்கலை., மாணவர்கள் அனிதா மொகில், பாலகிருஷ்ணன், சோலை ராஜா முரளி, தாமஸ் மற்றும் குழுத்தலைவர் சக்திவேல் காசிநாத் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் விமானங்களின் பாகங்களை மாற்றி, ஒரு துளி கூட சத்தம் இல்லாமல் விமானங்களை இயக்குவது எப்படி என்ற கருத்தின் அடிப்படையில் இம்மாணவர்கள் விளக்கங்களை அளித்துள்ளனர்.
இவர்கள் தவிர, ஆஸ்திரேலியா, பிரேசில், இத்தாலி மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதிப்போட்டி வரும் ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ளது. முடிவுகள் ஜூன் 14ம் தேதி அறிவிக்கப்படும். வெற்றி பெறும் குழுவுக்கு 30 ஆயிரம் யூரோக்கள் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பெறும் குழுவுக்கு 15 ஆயிரம் யூரோக்கள் பரிசாக வழங்கப்படும்.

Tuesday, May 28, 2013

தமிழகப்பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறப்பு | தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகப்பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறப்பு | தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3 ம்தேதி துவங்குவதாக இருந்தது. தற்போது அதற்கு பதிலாக வரும் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, May 27, 2013

தமிழ்நாட்டில் அனல் காற்று வீசுவதால் பள்ளிக்கூடம் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரி பதில்

தமிழ்நாட்டில் அனல் காற்று வீசுவதால் பள்ளிக்கூடம் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரி பதில்


கடந்த 1998–ம் ஆண்டு இப்படி அதிக வெயில் அடித்த காரணத்தால் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் ஒரு வாரம் தள்ளி திறக்கப்பட்டன. அதுபோல இந்த வருடம் பள்ளிக்கூடம் திறப்பது தள்ளிப்போகுமா என்று ஆசிரியர்களும், மாணவர்களும், பல பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் ஜூன் மாதம் 3–ந்தேதி திறப்பதாக இருந்தது. இது தள்ளிவைக்கப்பட்டு 10–ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழ்நாட்டிலும் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிப்போகுமா? என்று கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

இதுவரை முடிவு எடுக்கவில்லை

புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது தெரியும். தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்துவருகிறது. சென்னையிலும் மற்ற இடங்களிலும் வெயில் அளவு நிறையவே குறைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) வெயில் குறைகிறதா என்று பார்க்கப்படும். இருப்பினும் பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிப்போடுவது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்

 

மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு 


கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மே 30-ம் தேதி மனு அளிப்பது என வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக. ராமு தலைமை வகித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் நியமன நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு என்பதை சிறப்பு அரசாணை மூலம் அறிவித்து உடன் பணி வழங்க வேண்டும்.

மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பழைய விதிமுறைகளின்படி 2001-க்கு முன்பு ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ம் தேதி முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.